திங்கள், 9 ஜனவரி, 2012

கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு!

 " கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு " என முழங்கி 26-11-2011 அன்று சுனாமி தாக்கிய நினைவு நாளில் "ஊர்திப் பயணம்" நெல்லையிலிருந்து - கூடங்குளம் நோக்கி செல்ல காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டு, தமிழக உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடுக்கப்பட்டு 7-12-2012 அன்று ஊர்திப் பயணம் நடத்தப் பட்டது.
      தொடக்க நிகழ்ச்சி நெல்லை மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் ராஜமாணிக்கம் தலைமையில் நடைபெற்றது.      நெல்லை மாவட்டச்   செயலாளர்   தோழர் துளசியம்மாள்,             
அனைத்துத் தமிழகப் பெண்கள் கழக மாநில அமைப்பாளர் தோழர் தொ.ஆரோக்கியமேரி, அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர். உதயகுமார், கட்சியின் பொதுச்செயலாளர்  தோழர் சிதம்பரநாதன் ஆகியோர் தொடக்க உரையாற்றினர். உறுப்பினர்கள் புஷ்பாராயன், மை.பா. சேசுராசன்,முகிலன்                ஆகியோர் உரையாற்றினர்.  
கட்சியின் கட்டுப்பாட்டுக் குழு  தலைவர் தோழர் எஸ்.அண்ணாதுரை கொடி அசைத்து ஊர்திப் பயணத்தைத் தொடக்கி வைத்தார்.

நாங்குநேரியில் தோழர்கள்    தூத்துக்குடி மாவட்டச்
செயலாளர் தோழர் ஜெயக்குமார்,துளசியம்மாள் உரையாற்றினர்.வள்ளியூர் பேருந்து நிலையம்முன்புதுளசியம்மாள்,தொ.ஆரோக்கியமேரி ஆகியோர் உரையாற்றினர்.
வள்ளியூர் பழைய பேருந்து நிலையத்தில் தமிழக இளைஞர் கழக மாநில அமைப்பாளர் தோழர் தங்க.தமிழ்வேலன், கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் சி.எம்.பால்ராஜ், மாநிலக்குழு தோழர் சேலம் கோ. சீனிவாசன், புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் தோழர்
  அருள்மொழி ஆகியோர் உரையாற்றினர்.                                   கள்ளிக்குளத்தில் துளசியம்மாள், காஞ்சி மாவட்டச் செயலாளர்  தோழர் நடராசன் உரையாற்றினர். சமூகரெங்கபுரம் வழியாக இராதாபுரம் வந்தடைந்த பயணத்தை வாழ்த்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றியச் செயலாளர் தோழர் சுந்தரம் வாழ்த்திப் பேசினார்.துளசியம்மாள், கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் தோழர் நா.குணசேகரன் உரையாற்றினார். பயணம் கூடங்குளத்திற்குள் மக்களின் அமோக வரவேற்புடன் நுழைந்தது. கட்சியின் மாநிலச் செயலாளர் பங்கெடுத்த 1989 கூடங்குளம் எதிர்ப்பு இயக்க சம்பவங்களை நினைவு கூர்ந்து உரையாற்றினார். தோழர்கள் கொடிகளுடன், கூடங்குளம் தெருக்களில் மக்களும் இணைந்து விண்ணதிர முழக்கமிட்டுவலம் வந்தனர். மக்கள் இயக்கத்தினரின் உபசரிப்புடன் பொதுச் செயலாளர் தோழர் சிதம்பரநாதன், உரையாற்றினார். மக்கள் இயக்கம் சார்பில் வழக்குரைஞர் சிவசுப்ரமணியன் வாழ்த்திப் பேசினார். இடிந்தகரை நோக்கிப் பயணம் செல்லும் வழியில் மக்கள் இயக்கத்தினர் வேண்டுகோளுக்கு இணங்க மாநிலச் செயலாளர் உரையாற்றினார். இடிந்தகரை வீதிகளில் குழந்தைகளும், பெண்களும் கடல் அலைகளுக்குப் போட்டியாக முழக்கமிட்டு போராட்ட மைதானம் வந்தடைந்தனர். போராட்ட மேடையில் தோழர்கள் தொ.ஆரோக்கியமேரி, மீ.த.பாண்டியன், சிதம்பரநாதன் ஆகியோர் உரையாற்றினர். பயணம் நெடுகிலும் 1989இல் தான் எழுதிய கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் பாடலை பாடிய சிற்பிமகன் பாடல்களுடன் நிறைவுற்ற பயணத்தை வாழ்த்தி மக்கள் இயக்க நிர்வாகி மில்டன் வாழ்த்திப் பேசினார். பயணக் குழுவினர் இடிந்தகரை, கூடங்குளம் போராட்ட உணர்வுகளுடன் தங்களது ஊர்கள நோக்கி விரைந்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) மக்கள் விடுதலை வரலாற்றில் ஒரு வசந்தமாக இப்பயணம் அமைந்தது.