வியாழன், 27 டிசம்பர், 2012

டெல்லி - நவ-22,23-2012

நவம்பர்-22, 23 - 2012 அன்று டெல்லி, தீன் தயாள் மார்க், காந்தி அமைத்த அறக்கட்டளை அரங்கில் இ.க.க (மா-லெ) மக்கள் விடுதலை அங்கமாகவுள்ள NCC - National Campaign Committee - தேசிய பிரச்சாரக் குழு  பயிற்சிப் பட்டறை தலைவர் எஸ்.பி.சுக்லா தலைமையில், நடைபெற்றது. எமது கட்சியின் சார்பில் நானும், பொதுச் செயலாளர் தோழர் ஜெய.சிதம்பரநாதன் அவர்களும் கலந்து கொண்டோம்.
சமூக நீதி: தலித்ஸ், மிகவும் பிற்படுத்தப் பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் நடப்புப் பிரச்சனைகள் எனும் தலைப்பில் திரு பி.எஸ்.கிருஷ்ணன் உரையாற்ற, உ.பியைச் சார்ந்த தாராபுரி விவாதத்தை முன்வைத்தார்.
நிலம், சுரங்கங்கள்,கனிமங்கள் வாழ்வுரிமைப் பிரச்சனைகள் எனும் தலைப்பில் கே.பி.சக்சேனா உரையாற்றினார்.கர்நாடகாவைச் சேர்ந்த ஹேர்மந்த் விவாதத்தை முன்வைத்தார்.
சி.பி.ஐ(எம் ) பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் நடப்பு அரசியல் சூழலும் -பாதையும் எனும் தலைப்பில் உரையாற்றினார்.
மத்திப்பிரதேசத்தைச் சேர்ந்த ஜெயா மேத்தா நிலம் குறித்த விவாதத்தை முன்வைத்தார்.டெல்லியைச் சேர்ந்த ஆனந்த ஸ்வரூப் வர்மா சனநாயக உரிமைகள் மற்றும் சுதந்திரம் பற்றி உரையாற்ற உ.பியைச் சேர்ந்த அகிலேந்தர் பிரதாப் சிங் விவாதத்தை முன்வைத்தார்.

 சிறுபான்மையினர் மீதான தாக்குதல் குறித்து டெல்லியைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஷீலா முஸ்தபா முன்வைத்தார்.
வேலையின்மை குறித்து லால் பகதூர் சிங் முன்வைத்தார். இறுதியில் நடைபெத்ர் அரசிய விவாதத்தில் " புரட்சிகர அரசியல் மேடையின் அவசியம் குறித்து விவாதிக்கப் பட்டது. அனைத்திந்திய மக்கள் முன்னணி " -ALL INDIA PEOPLE'S FRONT  எனும் அமைப்பை பதிவு செய்வது என முடிவு செய்யப்பட்டது.