புதன், 30 மே, 2012

மார்ச் - 23,2012 எதிர்ப்பியக்கம்.


மார்ச்-23,2012 நெல்லை - பாளை திடலில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு  மக்கள் கூட்டமைப்பின் அழைப்பை ஏற்று திரண்ட மக்கள், மற்றும் தலைவர்கள் -
ம.தி.மு.க - வை.கோ,
 நாம் தமிழர் - சீமான், 
த.தே.பொ.க - பெ.மணியரசன், த.தே.வி.இ - தியாகு, விடுதலைச் சிறுத்தைகள் - வன்னியரசு,  ஆதித்தமிழர் பேரவை - அதியமான், தமிழ்ப்புலிகள் - திருவள்ளுவன், மே 17 - திருமுருகன், 
சி.பி.ஐ(எம்-எல்) - சங்கரபாண்டியன்,  சேவ் தமிழ்ஸ் - செந்தில், 
சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி - ரஜினிகாந்த், 
தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சி - வேல்முருகன், 
பெண்கள் முன்னணி - கிறிஸ்டி, மற்றும் மனித நேய மக்கள் கட்சி, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம், கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு ஆகியோர் கலந்து கொண்டனர். தலைமை -பெ.தி.க - கொளத்தூர்   மணி, ஒருங்கிணைப்பு - இ.க.க(மா.லெ) மக்கள் விடுதலை மீ.த.பாண்டியன். 



செவ்வாய், 1 மே, 2012

மார்ச்-19,2012 கூடங்குள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

பிப்ரவரி-26,2012 சென்னையில் நடைபெற்ற கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மாநாட்டிற்குப் பிறகு கூடிய "கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு" மார்ச்-19,2012 அன்று தமிழ்நாடு தழுவிய அளவில் ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் நடத்துவது என முடிவு செய்தது. தமிழகத்தில் பரவலாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
  அதே மார்ச்-19,2012 அன்று தமிழக அரசின் காவல்துறை இராதாபுரம் வட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து ஆயுதப்படையைக் குவித்தது. போராட்டக்குழுவைச் சேர்ந்த வழக்குரைஞர் சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட பத்து பேரைக் கைது செய்தது.

மார்ச்- 8,2012 கூடங்குளம் எதிர்ப்பு பெண்கள் மாநாடு!

மார்ச்- 8, 2012 அன்று வள்ளியூரில் நடத்த இருந்த பெண்கள் மாநாடு சங்கரன்கோவில் இடைத்தேர்தல் காரணமாக அனுமதி மறுக்கப்பட்டது.  ஆனால் திட்டமிட்டபடி மாநாடு இடிந்தகரைக்கு மாற்றப்பட்டு செப்டம்பர் முதல் அணு உலை எதிர்ப்பு  மக்கள் போராட்டம் நடைபெறும் போராட்டக் களத்திலேயே நடைபெற்றது.

சனவரி-29,2012 கூடங்குளம் - முல்லை பெரியாறு -

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு மாநாடு-சென்னை

சனவரி- 21, 2012 அன்று திருச்சியில் தமிழகம் தழுவிய அளவில் முற்போக்கு, புரட்சிகர சக்திகள் கூடி கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் போராட்டத்தை பலப்படுத்துவது எனும் நோக்கில் புதிய கூட்டமைப்பு உருவாக்க கூடியது.
அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு. சு.ப. உதயகுமார் மற்றும் அதன் அரசியல் குழு பொறுப்பாளர் திரு மனோ.தங்கராஜ் ஆகியோர் வேண்டுகோளின்படி " அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் " எனும் பெயரில் சென்னையில் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டது.
பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களை ஒருங்கிணைப்பாளராகக் கொண்ட தலைமைக்குழு உருவாக்கப் பட்டது. சென்னை, விழுப்புரம், வேலூர், சேலம்,கோவை, தஞ்சை, திருச்சி, மதுரை, நெல்லை என ஒன்பது மண்டல ஒருங்கிணைப்புக் குழுக்கள் உருவாக்கப்பட்டது. வெற்றிகரமாக மாநாடு ,பேரணி, பொதுக்கூட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

திங்கள், 9 ஜனவரி, 2012

கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு!

 " கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு " என முழங்கி 26-11-2011 அன்று சுனாமி தாக்கிய நினைவு நாளில் "ஊர்திப் பயணம்" நெல்லையிலிருந்து - கூடங்குளம் நோக்கி செல்ல காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டு, தமிழக உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடுக்கப்பட்டு 7-12-2012 அன்று ஊர்திப் பயணம் நடத்தப் பட்டது.
      தொடக்க நிகழ்ச்சி நெல்லை மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் ராஜமாணிக்கம் தலைமையில் நடைபெற்றது.      நெல்லை மாவட்டச்   செயலாளர்   தோழர் துளசியம்மாள்,             
அனைத்துத் தமிழகப் பெண்கள் கழக மாநில அமைப்பாளர் தோழர் தொ.ஆரோக்கியமேரி, அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர். உதயகுமார், கட்சியின் பொதுச்செயலாளர்  தோழர் சிதம்பரநாதன் ஆகியோர் தொடக்க உரையாற்றினர். உறுப்பினர்கள் புஷ்பாராயன், மை.பா. சேசுராசன்,முகிலன்                ஆகியோர் உரையாற்றினர்.  
கட்சியின் கட்டுப்பாட்டுக் குழு  தலைவர் தோழர் எஸ்.அண்ணாதுரை கொடி அசைத்து ஊர்திப் பயணத்தைத் தொடக்கி வைத்தார்.

நாங்குநேரியில் தோழர்கள்    தூத்துக்குடி மாவட்டச்
செயலாளர் தோழர் ஜெயக்குமார்,துளசியம்மாள் உரையாற்றினர்.வள்ளியூர் பேருந்து நிலையம்முன்புதுளசியம்மாள்,தொ.ஆரோக்கியமேரி ஆகியோர் உரையாற்றினர்.
வள்ளியூர் பழைய பேருந்து நிலையத்தில் தமிழக இளைஞர் கழக மாநில அமைப்பாளர் தோழர் தங்க.தமிழ்வேலன், கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் சி.எம்.பால்ராஜ், மாநிலக்குழு தோழர் சேலம் கோ. சீனிவாசன், புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் தோழர்
  அருள்மொழி ஆகியோர் உரையாற்றினர்.                                   கள்ளிக்குளத்தில் துளசியம்மாள், காஞ்சி மாவட்டச் செயலாளர்  தோழர் நடராசன் உரையாற்றினர். சமூகரெங்கபுரம் வழியாக இராதாபுரம் வந்தடைந்த பயணத்தை வாழ்த்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றியச் செயலாளர் தோழர் சுந்தரம் வாழ்த்திப் பேசினார்.துளசியம்மாள், கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் தோழர் நா.குணசேகரன் உரையாற்றினார். பயணம் கூடங்குளத்திற்குள் மக்களின் அமோக வரவேற்புடன் நுழைந்தது. கட்சியின் மாநிலச் செயலாளர் பங்கெடுத்த 1989 கூடங்குளம் எதிர்ப்பு இயக்க சம்பவங்களை நினைவு கூர்ந்து உரையாற்றினார். தோழர்கள் கொடிகளுடன், கூடங்குளம் தெருக்களில் மக்களும் இணைந்து விண்ணதிர முழக்கமிட்டுவலம் வந்தனர். மக்கள் இயக்கத்தினரின் உபசரிப்புடன் பொதுச் செயலாளர் தோழர் சிதம்பரநாதன், உரையாற்றினார். மக்கள் இயக்கம் சார்பில் வழக்குரைஞர் சிவசுப்ரமணியன் வாழ்த்திப் பேசினார். இடிந்தகரை நோக்கிப் பயணம் செல்லும் வழியில் மக்கள் இயக்கத்தினர் வேண்டுகோளுக்கு இணங்க மாநிலச் செயலாளர் உரையாற்றினார். இடிந்தகரை வீதிகளில் குழந்தைகளும், பெண்களும் கடல் அலைகளுக்குப் போட்டியாக முழக்கமிட்டு போராட்ட மைதானம் வந்தடைந்தனர். போராட்ட மேடையில் தோழர்கள் தொ.ஆரோக்கியமேரி, மீ.த.பாண்டியன், சிதம்பரநாதன் ஆகியோர் உரையாற்றினர். பயணம் நெடுகிலும் 1989இல் தான் எழுதிய கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் பாடலை பாடிய சிற்பிமகன் பாடல்களுடன் நிறைவுற்ற பயணத்தை வாழ்த்தி மக்கள் இயக்க நிர்வாகி மில்டன் வாழ்த்திப் பேசினார். பயணக் குழுவினர் இடிந்தகரை, கூடங்குளம் போராட்ட உணர்வுகளுடன் தங்களது ஊர்கள நோக்கி விரைந்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) மக்கள் விடுதலை வரலாற்றில் ஒரு வசந்தமாக இப்பயணம் அமைந்தது.                                

ஞாயிறு, 25 டிசம்பர், 2011

தண்ணீர் உரிமைக்கான படைப்பாளிகள்- உணர்வாளர்கள் கூட்டமைப்பு- மதுரை சார்பில் 'உண்ணாநிலை அறப்போர்'


தண்ணீர் உரிமைக்கான படைப்பாளிகள்- உணர்வாளர்கள் கூட்டமைப்பு- மதுரை சார்பில் 'உண்ணாநிலை அறப்போர்' மதுரை காளவாசலில் நடைபெற்றது.
தங்கப்பாண்டியன் ஒருங்கிணைப்பில், பேரா. ஸ்டாலின் ராஜாங்கம் வரவேற்றார். எழுத்தாளர்கள் கோணங்கி, முதுக்கிருஷ்ணன், செந்தி, லிபி ஆரண்யா, ஜனகப்பிரியா, ஓவியர் பாபு ஆகியோர் உரையாற்ற அர்ஷியா, சேதுராமலிங்கம், தளபதி, ஜெ.பிரபாகரன், அ.ஜெகநாதன், அன்புவேந்தன், பூமிச்செல்வம், ரத்தினகுமார், தமிழ்முதல்வன், சாம்ராஜ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
உலகத் தமிழர் பேரமைப்பின் க.பரந்தாமன் தொடக்கிவைத்தார். தியாகி இம்மானுவேல் பேரவையின் பூ.சந்திரபோசு, ம.தி.மு.க.வின் புதூர் பூமிநாதன், விடுதலைச் சிறுத்தைகளின் இன்குலாப், தமிழ் தமிழர் இயக்கத்தின் பரிதி, குடியுரிமைப் பாதுகாப்பு நடுவத்தின் கேசவன், மகளிர் ஆயத்தின் அருணா, மக்கள் சனநாயக் குடியரசுக் கட்சியின் செல்வி, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் மருத்துவர் சங்கீதா, வழக்குரைஞர்கள் அருணாசலம், வாஞ்சிநாதன், மருத்துவர் சரவணகுமார் ஆகியோர் உரையாற்ற,
புரட்சிக் கவிஞர் பேரவையின் ஐ.ஜெயராமன், அம்பேத்கர் தேசிய இயக்கத்தின் அம்பேத்பாபு, தமிழக ஒடுக்கப் பட்டோர் விடுதலை இயக்கத்தின் விடுதலைச் செல்வன், பெரியார் திராவிடர் கழகத்தின் பெரியசாமி,தமிழ்ப்பித்தன், மருத்துவர் ஜெயக்குமார், தொ.ஆரோக்கியமேரி வழக்குரைஞர்கள் விஜயலட்சுமி, பாரதி, பொற்கொடி, மற்றும் பலர் கலந்து கொண்டனர். முல்லை பெரியாறு அணையின் முன்னாள் செயற்பொறியாளர் சுதந்திர அமல்ராஜ் விரிவாகப் பேசியதோடு கேள்விகளுக்கும் பதிலளித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) மக்கள் விடுதலையின் மீ.த.பாண்டியன் நிறைவுரையாற்றினார். வழக்குரைஞர். பகவத்சிங் உரையாற்றி, பழரசம் கொடுத்து முடித்து வைத்தார்.