வெள்ளி, 16 நவம்பர், 2012

தோழர் ஏ.வி 2வது ஆண்டு நினைவேந்தல் கூட்டம்.

இ.க.க(மா-லெ) மக்கள் விடுதலை கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர், சனநாயகத் தொழிற் சங்க தலைவர், ஏ.வி என அழைக்கப்படும் தோழர் அ.வெங்கடேசன் அவர்களின் இரண்டாமாண்டு நினைவேந்தல் கூட்டம் வேலூர் மாவட்டம் ஆம்பூரில் நடைபெற்றது.

 தோல் மற்றும் தோல் பொருள் தொழிலாளர் சங்கத் தலைவர் தோழர் சுகுந்தன் தலைமையில் நடைபெற்ற நினைவேந்தல் கூட்டத்தில் இ.க.க(மா-லெ)மக்கள் விடுதலை கட்சியின் கட்டுப்பாட்டுக் குழு தலைவர் எஸ்.அண்ணாதுரை சங்கக கோடி ஏற்றி வைக்க, முதுபெரும் தோழர் கனிபாய் (எ) நல்லசிவம் தோழர் அ.வெங்கடேசன் அவர்களது படத்தைத் திறந்து வைத்தார். பொதுச் செயலாளர் தோழர் சிதம்பரநாதன், மாநிலச் செயலாளர் தோழர் மீ.த.பாண்டியன், மத்தியக் குழு உறுப்பினர் தோழர் தமிழ்வேலன், மாநிலக்குழு உறுப்பினர் தோழர் கருணாகரன்,சங்க பொருளாளர் தோழர் வழக்குரைஞர் கார்க்கிவேலன் ஆகியோர் உரையாற்றினர்.