செவ்வாய், 1 மே, 2012

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு மாநாடு-சென்னை

சனவரி- 21, 2012 அன்று திருச்சியில் தமிழகம் தழுவிய அளவில் முற்போக்கு, புரட்சிகர சக்திகள் கூடி கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் போராட்டத்தை பலப்படுத்துவது எனும் நோக்கில் புதிய கூட்டமைப்பு உருவாக்க கூடியது.
அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு. சு.ப. உதயகுமார் மற்றும் அதன் அரசியல் குழு பொறுப்பாளர் திரு மனோ.தங்கராஜ் ஆகியோர் வேண்டுகோளின்படி " அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் " எனும் பெயரில் சென்னையில் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டது.
பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களை ஒருங்கிணைப்பாளராகக் கொண்ட தலைமைக்குழு உருவாக்கப் பட்டது. சென்னை, விழுப்புரம், வேலூர், சேலம்,கோவை, தஞ்சை, திருச்சி, மதுரை, நெல்லை என ஒன்பது மண்டல ஒருங்கிணைப்புக் குழுக்கள் உருவாக்கப்பட்டது. வெற்றிகரமாக மாநாடு ,பேரணி, பொதுக்கூட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக