சனி, 9 ஜூலை, 2011

சி.பி.ஐ மத்தியக் குழுவிற்குப் பாராட்டுக்கள்

 ஜூலை-8, இலங்கைத் தமிழர் ஒருமைப்பாட்டு தினத்தைக் கடைப்பிடிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவிற்கு இ.க.க ( மா - லெ ) மக்கள் விடுதலை சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2008 ல் ஈழத் தமிழர் மீதான சிங்கள யுத்தம் தீவிரமானபோது அக் - 2 ல் தமிழகத்தில் சி.பி.ஐ தனது முயற்சி மூலம் தொடங்கி வைத்தது. தற்போது உலகம் முழுவதும் இனப்படுகொலை எதிர்ப்பாளர்கள், புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் இலங்கை அரசை போர்க்குற்ற அரசாக விசாரணை நடத்தி, தண்டிக்க வேண்டும் என குரல் எழுப்பி வருகிறார்கள். இனப்படுகொலைப் போர்க் குற்றவாளி இராசபக்சே தன்னையும், தனது அரசையும் காப்பாற்றிக் கொள்ள இந்திய அரசின் துணையை நாடுகிறான். 2008 - 2009 இறுதி யுத்தத்தில் இலங்கை அரசின் ஈழத் தமிழர்கள் மீதான படுகொலைத் தாக்குதலுக்கு எதிராகத் தமிழகத்தில் எதிர்ப்பலைகள் உருவானது. தமிழக மக்களின் உணர்வுகளைப் புறந்தள்ளி, காங்கிரசின் இந்திய அரசு அனைத்து வித இராணுவ உதவிகளையும் அளித்து இலங்கை அரசுக்குத் துணை நின்றது. இன்று வரை தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலும், கைதும் நிறுத்தப்படவில்லை.
 உலக நாடுகள் இராசபக்சேவைத் தண்டிக்க ஐ.நா. குழுவின் அறிக்கையும், பிரிட்டனின் சேனல்4 காணொளிக் காட்சிகளும் துணை நிற்கும் நேரமிது. இந்தியா முழுவதும் ஈழத்தமிழர் பிரச்சனை மீது திரும்பிப் பார்க்க வைக்கும் தீர்மானத்தை சி.பி.ஐ மத்தியக்குழு நிறைவேற்றி இருப்பது உற்சாகமூட்டுகிறது. இத் தீர்மானம் சர்வதேச இடதுசாரி அமைப்புகள் மத்தியில் விவாதத்தை உருவாக்குவது நிச்சயம். இராசபக்சே அழைப்பை ஏற்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை செல்வதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு இந்திய அரசு, இலங்கை அரசுடன் நிற்கிறது என சர்வதேச சமூகத்திற்கு அறிவிக்கும் செயலாகும். தமிழக சட்டமன்றத் தேர்தலில் கடுமையான அடிவாங்கியும் காங்கிரசின் இந்திய அரசு உணரத் தயாரில்லை. தமிழக சட்ட மன்றத்தில் முதல்வர் முன்மொழிந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக சட்ட மன்றத் தீர்மானம் தமிழகத்தின் தீர்மானம் என்பதைப் புறந்தள்ளி இலங்கை செல்லச் சம்மதித்துள்ளது இந்தியத் தமிழர்களை உதாசீனப்படுத்தும் செயலாகும்.தமிழர் உணர்வுகளை மீறி இச்சூழலில் இந்தியப் பிரதமர் இலங்கை செல்வாரெனில் தமிழகம் முழுவதும் கருப்புக்கொடி               இ.க.க (மா - லெ )மக்கள் விடுதலை மத்தியக் குழு தீர்மானித்துள்ளது. சி.பி.ஐ மத்தியக்குழுவின் இத் தீர்மானம் இந்திய அரசை எச்சரிப்பதாகவும், ஈழத் தமிழர்களை உற்சாகப்படுத்துவதாகவும் உள்ளது.  ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் ) மக்கள் விடுதலை தமிழ் மாநிலக்குழு பாராட்டுகிறது. இணைந்து நிற்கிறது.
 மீ.த.பாண்டியன். மாநிலச் செயலாளர்,இ.க.க(மா-லெ)மக்கள் விடுதலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக