புதன், 18 ஜூலை, 2012

பெ.தி.க. தோழர் பழனி நினைவேந்தல்

ஆதிக்க எதிர்ப்புப் போராளி பெரியார் திராவிடர் கழக கிருஷ்ணகிரி மாவட்ட அமைப்பாளர் தோழர் மு.பழனி, சி.பி.ஐ கட்சியைச் சார்ந்த தளி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் கும்பலால் கொலை செய்யப்பட்டார். 15-07-2012 அன்று மாலை ஓசூர்-இராயக்கோட்டையில் நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. 

மாவட்டத் தலைவர் குமார் தலைமையில் பெ.தி.க.தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், இ.க.க(மா-லெ) மக்கள் விடுதலை மாநிலச் செயலாளர் தோழர் மீ.த.பாண்டியன், மே 17 இயக்கம்- திருமுருகன், தலித் விடுதலைக் கட்சி- செங்கோட்டையன், தமிழக மக்கள் உரிமைக் கழக- வழக்குரைஞர் புகழேந்தி, சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி- வழக்குரைஞர் ரஜினிகாந்த், சி.பி.ஐ (எம்.எல்)- விந்தைவேந்தன், சேவ் தமிழ்ஸ்- செந்தில், தமிழக மக்கள் புரட்சிக் கழகம்- அரங்க குணசேகரன், அயோத்திதாசர் ஆய்வு நடுவம்- ராமலிங்கம், தமிழக மக்கள் சனநாயகக் கூட்டமைப்பு- குணா, மற்றும் பலர் கண்டன உரையாற்றினர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக