புதன், 18 ஜூலை, 2012

தோழர் செல்வராஜ் நினைவேந்தல் கூட்டம்

இ.க.க(மா-லெ) மக்கள் விடுதலை மாநிலக் குழு உறுப்பினரும், சனநாயகத் தொழிற்சங்க (DTUC) மாநிலச் செயலாளரும், என்.எல்.சி. தொழிலாளர் ஒருமைப்பாட்டுச் சங்கத் தலைவருமான தோழர் செல்வராஜ் நினைவேந்தல் கூட்டம் 10-07-2012 அன்று மாலை நெய்வேலி பவுனாம்பால் நகரில் நடைபெற்றது. 

கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் மீ.த.பாண்டியன் தலைமையில் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் தோழர் நா.குணசேகரன்  தோழர் செல்வராஜ் படத்தைத் திறந்து வைத்தார். 

சனநாயகத் தொழிற் சங்க மையப் பொதுச் செயலாளர்  தோழர் சுகுந்தன், மத்தியக்குழு உறுப்பினர் தோழர் தமிழ்வேலன், மாநிலக்குழு உறுப்பினர்கள் தோழர்கள்- கோ.சீனிவாசன், அருணாசலம், கருணாகரன், மற்றும் என்.எல்.சி.ரவிச்சந்திரன், சவகர், நவநீதன், ராமலிங்கம், மனோகரன், கென்னடி, கலைமணி, ராஜ்குமார், லட்சுமிநாராயணன், வழக்குரைஞர் கென்னடி மற்றும் தொ.மு.ச. சார்பில் திரு விக்கிரமன், உத்தராசு ஆகியோர் தங்களது நினைவுகளைப் பதிவு செய்தனர். 

கட்சியின் கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் தோழர் எஸ்.அண்ணாதுரை கட்சி சார்பில் தோழர் செல்வராஜ் துணைவியார் குணா அவர்களிடம் நிதி அளித்தார். கடலூர் மாவட்டச் செயலாளர் தோழர் ராமர் நன்றி கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக