திங்கள், 5 டிசம்பர், 2011

"பரமக்குடி துப்பாக்கிச் சூடு எதிர்ப்பு நடவடிக்கைக் குழு"



விபத்தைப் போல கடந்து போகும் தமிழர் மனோநிலையை மூன்று மாதம் கழித்து உலுக்க எடுத்த முயற்சி. ஒடுக்குபவர்கள், ஒடுக்கப்படுபவர்கள் மத்தியில் நிலவும் சாதிய மனோநிலை உருவாக்கிய மௌனத்தைக்     கலைக்க பாதிக்கப்பட்ட பரமக்குடி ஒடுக்கப்பட்ட பகுதி மக்களுடன் இணைந்து தியாகி இமானுவேல் பேரவை உள்ளிட்ட ஒடுக்கப்பட்டோர் அமைப்புகளும், இடதுசாரி அமைப்புகளும், மனித உரிமை அமைப்புகளும் இணைந்த "பரமக்குடி துப்பாக்கிச் சூடு எதிர்ப்பு நடவடிக்கைக் குழு" வின் தொடர் முயற்சி........

இன்று பரமக்குடியில்... நாளை கூடங்குளத்தில்....?

"பரமக்குடி துப்பாக்கிச் சூடு எதிர்ப்பு நடவடிக்கைக் குழு" சார்பில் தமிழக அரசின் சம்பத் குழு விசாரனையைப் புறக்கணித்து, முன்னாள் நீதியரசர் மும்பை சுரேஷ் அவர்கள் தலைமையில் நடத்தப்பட்ட பொது விசாரணை அறிக்கையை ஏற்றுக் கொண்டு தமிழக அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு வழிவிட வலியுறுத்தி தொடர்ந்து போராடுவோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக