ஞாயிறு, 25 டிசம்பர், 2011

தண்ணீர் உரிமைக்கான படைப்பாளிகள்- உணர்வாளர்கள் கூட்டமைப்பு- மதுரை சார்பில் 'உண்ணாநிலை அறப்போர்'


தண்ணீர் உரிமைக்கான படைப்பாளிகள்- உணர்வாளர்கள் கூட்டமைப்பு- மதுரை சார்பில் 'உண்ணாநிலை அறப்போர்' மதுரை காளவாசலில் நடைபெற்றது.
தங்கப்பாண்டியன் ஒருங்கிணைப்பில், பேரா. ஸ்டாலின் ராஜாங்கம் வரவேற்றார். எழுத்தாளர்கள் கோணங்கி, முதுக்கிருஷ்ணன், செந்தி, லிபி ஆரண்யா, ஜனகப்பிரியா, ஓவியர் பாபு ஆகியோர் உரையாற்ற அர்ஷியா, சேதுராமலிங்கம், தளபதி, ஜெ.பிரபாகரன், அ.ஜெகநாதன், அன்புவேந்தன், பூமிச்செல்வம், ரத்தினகுமார், தமிழ்முதல்வன், சாம்ராஜ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
உலகத் தமிழர் பேரமைப்பின் க.பரந்தாமன் தொடக்கிவைத்தார். தியாகி இம்மானுவேல் பேரவையின் பூ.சந்திரபோசு, ம.தி.மு.க.வின் புதூர் பூமிநாதன், விடுதலைச் சிறுத்தைகளின் இன்குலாப், தமிழ் தமிழர் இயக்கத்தின் பரிதி, குடியுரிமைப் பாதுகாப்பு நடுவத்தின் கேசவன், மகளிர் ஆயத்தின் அருணா, மக்கள் சனநாயக் குடியரசுக் கட்சியின் செல்வி, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் மருத்துவர் சங்கீதா, வழக்குரைஞர்கள் அருணாசலம், வாஞ்சிநாதன், மருத்துவர் சரவணகுமார் ஆகியோர் உரையாற்ற,
புரட்சிக் கவிஞர் பேரவையின் ஐ.ஜெயராமன், அம்பேத்கர் தேசிய இயக்கத்தின் அம்பேத்பாபு, தமிழக ஒடுக்கப் பட்டோர் விடுதலை இயக்கத்தின் விடுதலைச் செல்வன், பெரியார் திராவிடர் கழகத்தின் பெரியசாமி,தமிழ்ப்பித்தன், மருத்துவர் ஜெயக்குமார், தொ.ஆரோக்கியமேரி வழக்குரைஞர்கள் விஜயலட்சுமி, பாரதி, பொற்கொடி, மற்றும் பலர் கலந்து கொண்டனர். முல்லை பெரியாறு அணையின் முன்னாள் செயற்பொறியாளர் சுதந்திர அமல்ராஜ் விரிவாகப் பேசியதோடு கேள்விகளுக்கும் பதிலளித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) மக்கள் விடுதலையின் மீ.த.பாண்டியன் நிறைவுரையாற்றினார். வழக்குரைஞர். பகவத்சிங் உரையாற்றி, பழரசம் கொடுத்து முடித்து வைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக