செவ்வாய், 20 டிசம்பர், 2011

கூடங்குளம், பரமக்குடி, முல்லை பெரியாறு போராட்டங்களை ஒருங்கிணைப்போம்!


17-12-2011கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் கவிதா என்கிற பெண் படுகொலையில் காவல்துறையின் மெத்தனத்தைக்   கண்டித்து மாவட்டச் செயலாளர் சி.எம்.பால்ராஜ் தலைமையில்ஆர்ப்பாட்டம்.தோழர் துளசியும் நானும் கண்டன உரையாற்றினோம்.
 ‎
18-12-2011 கூடங்குளம் பத்திரகாளியம்மன் கோவிலிலிருந்து ஆயிரக்கணக்கான மக்களுடன் இராதாபுரம் நோக்கி " அணு உலை எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் உதயகுமாரன் தலைமையில் நடைபெற்ற பேரணியில் தோழர்கள் துளசி, இராஜ், இராஜா செந்தில் ஆகியோருடன் கலந்து கொண்டேன்.

19-12-2011 நெல்லை பாளையங்கோட்டை, ஜவஹர் திடலில் எஸ்.சி,எஸ்.டி, மத்திய மாநில அரசு ஊழியர் கூட்டமைப்பு சார்பில் சி.பி.ஐ. விசாரணை கோரி " பரமக்குடி துப்பாக்கிச் சூடு நூறாவது நாள் கண்டன ஆர்ப்பாட்டம், தலைவர் அம்பேத்கர் தலைமையில், செயலாளர் சுவாமிநாதன் ஒருங்கிணைப்பில், சி.பி.ஐ(எம்) மாவட்டச் செயலாளர் தோழர் பழனி அவர்கள் தொடங்கி வைக்க நானும் கண்டன உரையாற்றினேன். தோழர்கள் ராஜமாணிக்கம், நரசிங்கநல்லூர் மாரியப்பன், பேட்டை மாரியப்பன், நம்பி,சவரி, ஆறுமுகம், முத்துகுமார், ஆகியோர் என்னுடன் கலந்து கொண்டனர்.

20-12-2011 முல்லை பெரியாறு அணையைப் பாதுகாப்போம், கேரளா இனவெறி அரசியல் கட்சிகளைக் கண்டித்து தேனி வீரபாண்டியில் சபாபதி அவர்கள் தலைமையில் ஊர் சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் என்னுடன் சண்முகப்பாண்டி,அய்யன்காளை, கூடலூரில் முல்லை பெரியாறு அணை பாதுகாப்புக் குழு சார்பில் ஐந்தாவது நாள் தொடர் போராட்டத்தில் பிரபு அவர்கள் ஒருங்கிணைப்பில், விவசாயிகள் விடுதலை முன்னணி தலைவர் தோழர் மோகன் தலைமையில் கலந்து கொண்டு உரையாற்றினேன். என்னுடன் வீரபாண்டி சிவகுமார் கலந்து கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக