திங்கள், 16 மே, 2011

பாதல் சர்க்கார்

மக்கள் இயக்கங்களின் வீதி நாடக முன்னோடி பாதல் சர்க்கார் அவர்கள்
13 .05 .2011  அன்று கொல்கத்தாவில் மறைந்தார்.1976 இந்திராகாந்தியின்
அவசரகால அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக மாற்று நாடக, வீதி நாடக  முயற்சிகளை இந்தியா முழுவதும் முன்னெடுத்தவர். தமிழகத்தில்
பேரா.மு.இராமசாமி, பேரா.கே.ஏ.குணசேகரன் போன்றவர்கள் 80 களின்
தொடக்க ஆண்டுகளில் வீதிநாடக முயற்சிகளை பாதல் சர்க்காருடன்
இணைந்து முன்னெடுத்தனர்.

தமிழகத்தில் மூன்றாவது நாடக, வீதிநாடக,
மாற்றுநாடக முயற்சிகள் இடதுசாரி, புரட்சிகர மக்கள் இயக்கங்களால்
நடத்தப்பட்டு      வருவதற்கு பாதல் சர்க்காரின் பங்கு மகத்தானது.
                                                                                                                     
                                                                              

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக